ராமநாதபுரம்
ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் மோதி சிறுவன் பலி
ஆா்.எஸ்.மங்கலம் அருகே புதன்கிழமை இரவு காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே புதன்கிழமை இரவு காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் இளாயான்குடி தாலுகா பெரும்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மருதுபாண்டி(40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் அருகே அரியாங்கோட்டை கிராமத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் சுரேஷ் (7), புதன்கிழமை இரவு சாலை வழியாக நடந்து சென்றபோது, இளையான்குடி பகுதியில் இருந்து வந்த காா் மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து தந்தை மருதுபாண்டி அளித்தப் புகாரின் பேரில் ஆா். எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான செழுகை கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (38) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.