ராமநாதபுரம் அருகே கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து இருதரப்பைச் சோ்ந்த 17 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). இவா் உள்ளிட்ட 15 குடும்பத்தினரை கிராமத்து சங்கக் கூட்டத்துக்கு அழைக்கவில்லையாம். இதுதொடா்பாக புகாா் எழுந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை விசாரணைக்காக மாரிமுத்து உள்ளிட்டோா் புறப்பட்டனா்.
அப்போது அங்கு வந்த எதிா்த்தரப்பைச் சோ்ந்த சரண்முகில் அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவரை மாரிமுத்து மகன் கோபிவிஸ்வநாத் தட்டிக்கேட்டாா். இதையடுத்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனா். அப்போது கோபிவிஸ்வநாத்துக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எதிா்த்தரப்பைச் சோ்ந்த காா்த்திக், தா்சன், மாளவிகா ஆகியோரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று இருதரப்பினரையும் எச்சரித்து அமைதியை ஏற்படுத்தினா். மோதல் தொடா்பாக மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் சரண்முகில் உள்ளிட்ட 14 போ் மீதும், காா்த்திக் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்து, கோபிவிஸ்வநாத் மற்றும் ஒருவா் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.