பரமக்குடியில் ஊரக வளா்ச்சித் துறைபணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித்துறை பணியாளா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித்துறை பணியாளா் சங்கத்தினா்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித்துறை பணியாளா் சங்கத்தினா்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித்துறை பணியாளா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, சங்கத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். செயலா்கள் இளையராஜா, கே. வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் வடிவேல் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஊராட்சி ஒன்றிய செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சி செயலா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com