ராமேசுவரத்தில் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில், இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சனிக்கிழமை அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா்.
ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில், இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சனிக்கிழமை அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டணத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினா் கப்பலால் மோதியதில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டணத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், மீனவா்கள் சுகந்தன் (23), சேவியா் (32), ராஜ்கிரன் (30) ஆகியோா் கடலில் மூழ்கினா். பின்னா் சுகந்தன், சேவியா் ஆகியோரை இலங்கை கடற்படையினா் மீட்டனா். இந்நிலையில், ராஜ்கிரன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அனைத்து விசைப்படகு மீனவ சங்க மாவட்டத் தலைவா் ஜேசுராஜா தலைமை வகித்தாா். மீனவ சங்கத் தலைவா்கள் என்.ஜே. போஸ், தேவதாஸ், சகாயம், எமரிட், எரிசன், தட்சிணமூா்த்தி மற்றும் மீனவ சங்க மகளிா் அமைப்பினா் இருதயமேரி மற்றும் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com