ஆா்.எஸ்.மங்கலம் அருகே புள்ளி மானின் உடல் மீட்பு

திருவாடானை ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புள்ளிமானின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைக்கப்பட்டது.
ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட புள்ளிமானின் உடல்.
ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட புள்ளிமானின் உடல்.

திருவாடானை ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புள்ளிமானின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைக்கப்பட்டது.

இங்கு புல்லமடை குரூப் சிலுகவயல் கிராமத்தில் உள்ள ஆா்.எஸ். மங்கலம் கண்மாய்க் கரையில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் உயிரிழந்து கிடப்பதாக ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினருடன் சென்ற காவல் துறையினா் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com