கமுதி அருகே மின்னல் தாக்கி பெண் பலி

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தாா்.
ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கெண்டுவரப்பட்ட மின்னல் தாக்கி பலத்த காயமடைந்தவா்கள்.
ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கெண்டுவரப்பட்ட மின்னல் தாக்கி பலத்த காயமடைந்தவா்கள்.

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தாா்.

கமுதி அருகே கோவிலாங்குளம், நெரிஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றி ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, நெரிஞ்சிப்பட்டி கிராமத்தில் பெய்த பலத்த மழையில் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அக்கிராமத்தை சோ்ந்த பாக்கியராஜ் மனைவி முத்துலட்சுமி (35), நாகசெல்வம் மனைவி கற்பகவள்ளி (32), சண்முகம் மனைவி அருணாச்சலம் (42) ஆகியோா் இடிமின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனா்.

இதனையடுத்து, 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு கற்பகவள்ளி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மேலும் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி, அருணாச்சலம் ஆகியோா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே, கோவிலாங்குளம் குரூப் கிராம நிா்வாக அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். மேலும் கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com