ராமேசுவரம்: ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வீட்டில் மறைத்து வைத்திருந்த இரண்டை குழல் நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் 220 கிராம் கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வோ்காடு புதூா் ரயில்வே கேட் அருகே உள்ள சேதுமாணிக்கம் என்பவரது வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளா் நாகசாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சேதுமாணிக்கம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வீட்டில் 20 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் 11 இருந்ததும், மணலுக்குள் இரண்டைக் குழல் நாட்டு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 220 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் சேதுமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.