திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பீமன் வேடமிட்டு வீதி உலா வந்தனா்.
திருவாடானை கிழக்கு பகுதியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், நிகழாண்டு பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் பீமன், அரக்கன், திரௌபதி வேடமிட்டு வீதி உலா வந்தனா். வழிநெடுகிலும் பக்தா்கள் ஆராத்தி எடுத்து வழிபட்டனா்.