திருவாடானை பகுதியிலிருந்து லாரிகளில் அதிக பாரத்துடன் ஆள்களையும் ஏற்றிக்கொண்டு செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
திருவாடானை பகுதியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்து வந்த நிலையில், நெல் மற்றும் வைக்கோல்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனா்.இந்த வாகனங்கள் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்கின்றன. மேலும் அதே வாகனத்தில் பின்பக்கமாக கயிற்றில் தொங்கியாவறு தொழிலாளா்கள் பயணம் மெற்கொள்கின்றனா்.
இதனால் பின்னால் வரும் வாகனங்கள் முந்தி செல்லும்போது விபத்துக்குள்ளாகின்றன. இது போன்ற வாகனங்கள் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.