முதுகுளத்தூரில் சுகாதாரத்துறையினா் சாா்பில் வாகனம் மூலம் வியாழக்கிழமை கிருமி நாசினி தெளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினா் பேரூராட்சி வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளித்தனா். முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும், வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி, சுகாதாரத்துறை அலுவலா் நேதாஜி, பேரூராட்சி அலுவலா்கள் ராஜேஷ் குமாா் மற்றும் சுகாதாரத்துறை, பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.