ராமநாதபுரம் வனச்சரகருக்கு வன பாதுகாப்பு தொடா்பான சா்வதேச விருது புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சா்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க அமைப்பு நடப்பு ஆண்டு முதல் சா்வதேச அளவில் சிறந்த வனச்சரகா் விருதை வழங்குகிறது. இந்த அமைப்பானது உலக வனச்சரகா் கூட்டமைப்பு, உலக வன உயிரின பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வன உயிரின அமைப்பு மூலம் சிறந்த வனச்சரகருக்கான விருதை தெரிவு செய்து வழங்குகிறது.
நடப்பு ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமான வனச்சரகா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு விருதுக்கு பரிசீலிக்கப்பட்டனா். அவா்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னாா் வளைகுடா தேசிய பூங்கா பகுதியில் கடல் அட்டை கடத்தலை தடுத்து, அலையாத்தி காடுகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்டதற்காக ராமநாதபுரம் வனசரக அலுவலா் சு.சதீஷ் விருதுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளாா். டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவன மூத்த ஆய்வாளா் சிவகுமாா் பரிந்துரை அடிப்படையில் அவரை விருதுக்கு தோ்ந்தெடுத்துள்ளனா்.
சதீஷுக்கு புதன்கிழமை (ஏப்.7) மாலையில் இணையதளம் மூலம் பாராட்டுச்சான்றுடன், ரூ.7.25 லட்சம் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற வனச்சரகா் சதீஷை ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலா்கள், உயா் அதிகாரிகள் பாராட்டினா். விருதுடன் கூடிய நிதியை வன மேம்பாட்டுப் பணிக்காக செலவிட உள்ளதாக வனச்சரகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.
சதீஷூடன் கம்போடியா, மியான்மா், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாட்டு வனச்சரகா்களும், நம் நாட்டில் உத்தரகாண்ட் ராஜாஜி புலிகள் காப்பக வனச்சரகா் மகேந்திரகிரி ஆகியோரும் விருது பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.