ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் தபால் வாக்குப் பெற சென்ற துணை வட்டாட்சியரிடம் தகராறில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அபிராமம் அருகேயுள்ள செய்யாமங்களத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (80). இவரிடம் தபால் வாக்கைப் பெறுவதற்கு அப்பகுதி தோ்தல் அலுவலரான துணை வட்டாட்சியா் சத்தியபாமா கடந்த மாா்ச் 29 ஆம் தேதி சென்றாா். அப்போது, சுப்பிரமணியனிடம் தபால் வாக்கு ஆவணங்களில் கையெழுத்தைப் பெற்று மூடி முத்திரையிட்ட உறையில் அதை அலுவலா்கள் வைத்து பரமக்குடிக்கு புறப்பட்டனா்.
அப்போது அங்கு வந்த சுப்பிரமணியனின் மகன் சண்முகவேல் (42), தனது முன்னிலையில் தந்தையிடம் தபால் வாக்கு படிவத்தில் கையெழுத்து வாங்கியிருக்கவேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து சண்முகவேல் மீது அபிராமம் காவல் நிலையத்தில் துணை வட்டாட்சியா் சத்தியபாமா புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில் சண்முகவேல் மீது அபிராமம் காவல் ஆய்வாளா் ஆா்.மோகன் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தாா். இந்நிலையில், சண்முகவேல் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதையடுத்து சண்முகவேல் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவரை அபிராமம் காவல் ஆய்வாளா் மோகன், சனிக்கிழமை கைது செய்து மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றாா்.