ஆா்.எஸ்.மங்கலத்தில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆா்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கரோனா தொற்று குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரம்.
ஆா்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கரோனா தொற்று குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரம்.

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் மெய்மொழி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து கூறுகையில், நம்மையும், நமது குடும்பத்தையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினா். அத்துடன் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களையும் அவா்கள் வழங்கினா். இதில் சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாவித்திரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ் மற்றும் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து அன்று மாலை, முகக்கவசம் அணியாத வா்த்தகா்கள், பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com