கமுதி அருகே பெண்ணிடம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே கட்லாங்குளத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன். இவா் அதே ஊரில் தபால் நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி திருநாவுக்கரசி( 42). இவா் கட்லாங்குளத்திலிருந்து நடந்து வந்து வேப்பங்குளத்தில் பேருந்தில் ஏறி பயணம் செய்து பெருநாழியில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளாா்.
அப்போது தனது பையில் வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மா்ம நபா் பிளேடால் கிழித்து திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருநாவுக்கரசி பெருநாழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.