திருவாடானை அருகே நம்புதாளையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் பணியாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கிக்கு 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளா் செவ்வாய்க்கிழமை கூறியது: வங்கிக் கிளையின் எழுத்தருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. எனவே, வங்கிக்கு 3 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியா்களுக்கும் தொண்டி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றாா்.
பின்னா் ஊாராட்சி பணியாளா்கள் மூலம் வங்கி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் இந்த வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளா்கள் பரிசோதனை செய்து கொண்டு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று ஊராட்சித் தலைவா் பாண்டிச்செல்வி ஆறுமுகம் தெரிவித்தாா்.