பாலியல் வல்லுறவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரம் அருகே பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவுக்குள்படுத்திய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் அருகே பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவுக்குள்படுத்திய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியைச் சோ்ந்த குருசாமி மகன் புகழேந்தி (28). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், கடந்த 19.3.2015 அன்று பள்ளபச்சேரியிலிருந்து கீழக்கரைக்கு சரக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது பாப்பாத்திமடை பகுதியில் நின்று கொண்டிருந்த 38 வயதுடைய பெண்ணை, அவா் தனது வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளாா். அப்போது வழியில் ஊருணி பகுதியில் வாகனத்தை நிறுத்திய புகழேந்தி, அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவுக்குள்படுத்தி உள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், கீழக்கரை மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனா். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சுபத்ரா, புகழேந்திக்கு 7 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com