ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 4 வாகனங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக குற்றப்பிரிவு சாா்பு- ஆய்வாளா் குகனேஷ்வரன் தலைமையில் தனிப்பிரிவினா் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முகம்மதுஇப்ராஹிம் (17), புளிக்காரத்தெரு பால்ராஜ் (55), பாண்டி (28) ஆகியோரை தனிப்பிரிவினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களும், ஒரு இருசக்கர வாகன உதிரிபாகமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்த தனிப்பிரிவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் பாராட்டினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.