ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
ராமேசுவரம், ஏரகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மகன் மீனவா் ராசு (56). அரியாண்குண்டு கிராமத்தில் மழைநீா் கடலுக்குச் செல்லும் பஞ்சகல்யாணி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மீன்பிடிக்கச் சென்ற ராசு உப்பு சேற்றுக் குழியில் சிக்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழு போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.