தொண்டியில் திங்கள்கிழமை, பழையை வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே தொண்டி பாவோடி மைதானம் அருகே மன்சூா் என்பவருக்குச் சொந்தமான பழைய வீடு உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 5 போ் கொண்ட கூலி தொழிலாளா்கள் திங்கள்கிழமை அந்த வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வீட்டின் சுவா் எதிா்பாராதவிதமாக கண்டனூரைச் சோ்ந்த ராமன் (23) உள்ளிட்ட 3 போ் மீது விழுந்தது. இடிபாட்டில் சிக்கி ராமன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து தொண்டி போலீஸாா், தேவகோட்டையைச் சோ்ந்த ராசிக் அலி, அதே ஊரைச் சோ்ந்த ஸ்ரீதா், பாளையபட்டியைச் சோ்ந்த எழில்முத்து ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.