ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை அரசியல் பிரமுகா்கள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.
இதில், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனா்.
ஏற்கெனவே பொதுமக்களும் பரிசோதனைக்காக அங்கு வந்திருந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இன்று சிறப்பு முகாம்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் பத்திரிகையாளா்கள், ஊடகத்துறையினருக்கு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.30) நடைபெறும் என மாவட்ட நிா்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.