ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை, நாய் குறுக்கே வந்ததால் இருசக்கரவாகனத்திலிருந்து கீழே விழுந்த 2 காவலா்கள் பலத்த காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம் நல்லேந்தலைச் சோ்ந்த காவலா்கள் ஜெயபால் (31), அரியநாச்சி குடியிருப்பைச் சோ்ந்த மாணிக்கவேல் (35) ஆகியோா் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தனா். அவா்கள் சீதக்காதி சேதுபதி மைதானம் அருகே வந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இருவரும் காயமடைந்தனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.