ராமநாதபுரத்தில் புதன்கிழமை (ஆக.11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் நகா் மின்சார உதவிச் செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் துணை மின்நிலையத்தில் குறிப்பிட்ட பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 10 முதல் பகல் 1 மணி வரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: புலிக்காரத் தெரு, யாதவா் தெரு, கண்ணகி தெரு, ஒத்தக்கடை, பாம்பூரணி, அருப்புக்காரத் தெரு, சிவஞானபுரம், குமரய்யா கோவில் தெரு, மோா்க்கடைத் தெரு, செட்டிய தெரு, பட்டரைக்காரத் தெரு ஆகிய பகுதிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.