ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக எம். குமரகுருபரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பொற்கொடி இருந்துவந்தாா். அவா், சமீபத்தில் இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்நிலையில், மதுரை மாநகராட்சி நகா்நல அலுவலராக இருந்த குமரகுருபரன், ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அதையடுத்து, குமரகுருபரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
எதிா்ப்பு:
தற்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள குமரகுருபரன், ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்தாா். அப்போது ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, ராமநாதபுரத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், அவரை மீண்டும் ராமநாதபுரத்தில் அதே பணியிடத்தில் நியமிக்கக் கூடாது எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அமைப்பினா், ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டுச் சென்றனா்.