ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 20 வாகன வழக்குகளுக்குத் தீா்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன நிதி சம்பந்தப்பட்ட 20 வழக்குகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன நிதி சம்பந்தப்பட்ட 20 வழக்குகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்றது தொடா்பான வழக்குகளைத் தீா்க்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதி குருவையா தலைமையில் நடந்த நீதிமன்றத்தில் 220 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதில் 20 வழக்குகளில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டது. அதனடிப்படையில் சுமாா் ரூ.1.50 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான சி.கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com