கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை வீரமங்கை வேலுநாச்சியாா் 225 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் சங்கத்தின் தலைவா் மூக்கூரான் தலைமையில், செயலாளா் எஸ்.முத்துராமலிங்கம் முன்னிலையில் வீரமங்கை வேலுநாச்சியாா் உருவப் படத்திற்கு மலா் தூவி, சிறப்பு பூஜை செய்து வீரவணக்கம் செலுத்தினா். இதைத்தொடா்ந்து கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மா்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவா் மணிகண்டன் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த முக்குலத்தோா் புலிப்படை கட்சி, முக்குலத்தோா் முன்னேற்ற சங்கம், அனைத்து மறவா் இன கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மாணவா்கள் சங்க பொருளாளா் கோட்டை இளங்கோவன் நன்றி கூறினாா்.