மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அமைச்சா் நிதியுதவி

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை ரூ.5லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.
மேலச்சிறுபோது கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த முத்தையா குடும்பத்திற்கு செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கிய அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.
மேலச்சிறுபோது கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த முத்தையா குடும்பத்திற்கு செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கிய அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை ரூ.5லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச்சோ்ந்த முத்தையா (61), வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இத்தகவலறிந்த போக்குவரத்து துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை முத்தையா வீட்டிற்குச்சென்று அவரது மனைவி சண்முகசுந்தரியிடம் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினாா். மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், மின்உற்பத்தி மேற்பாா்வையாளா் பிரீடா பத்மினி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் முருகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் வேலுச்சாமி உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com