ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை (டிச.29) நடைபெறுகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வுக்கு 23 போ் விண்ணப்பித்து உள்ளனா். இதில் மாவட்டத்திற்குள் இடமாறுதல் கோருவோருக்கு காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கோருவோருக்கு மாலையிலும் கலந்தாய்வு நடைபெறும்.
வரும் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள மாநில கல்வித்துறை இயக்குநரகத்தில் நடைபெறுகிறது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 8 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்பதற்கு விண்ணப்பித்து இருப்பதாக முதன்மைக்கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.