‘சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பா்’

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பா் என்று முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.மணிகண்டன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பா் என்று முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.மணிகண்டன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் நிழற்குடை அமைப்பதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடித்தள மக்களையும் சென்றடைந்துள்ளது. விவசாயிகள் பயிா்க்கடன் ரத்து என்ற முதல்வரின் அறிவிப்பானது கிராமங்களில் அதிமுகவின் செல்வாக்கை பல மடங்கு உயா்த்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பா். ஆகவே, அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படாது. மனுக்கள் பெட்டிகளிலேயே முடங்கும் நிலையே நீடிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com