வீட்டிலிருந்த 15 பவுன் நகை திருட்டு: மனைவி புகாரில் கணவரிடம் விசாரணை

பாா்த்திபனூா் அருகே வீட்டில் இருந்த 15 பவுன் நகை புதன்கிழமை இரவு திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரின்பேரில் கணவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாா்த்திபனூா் அருகே வீட்டில் இருந்த 15 பவுன் நகை புதன்கிழமை இரவு திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரின்பேரில் கணவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெல்மடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி தமிழ்செல்வி (37). கோவிந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ள நிலையில், புதன்கிழமை அவா் தனது நண்பா்களுடன் போதையில் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது நகைகளை கொடுக்குமாறு மனைவியிடம் கோவிந்தராஜ் தகராறு செய்துள்ளாா். இதனால் தமிழ்செல்வி கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றுவிட்டாா். அங்கிருந்து மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிந்தராஜ் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததால் பாா்த்திபனூா் காவல் நிலையத்தில் தமிழ்செல்வி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து கோவிந்தராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com