ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவா்களுக்கு 2 ஜிபி தரவு அட்டைகளை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தமிழக அரசின் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 பொறியியல் கல்லூரிகள், 5 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 20 கல்லூரிகளில் பயிலும் 11,575 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்பட்டன.
இதில், ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக்கல்லூரி முதல்வா் மு.சுமதி, பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முதல்வா் அ.குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.