சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா், காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் ஆகியோா் சனிக்கிழமை மாலை தொடக்கி வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாகனச் சோதனையை தொடக்கி வைத்த பின்னா் ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 3 நிலைத்த கண்காணிப்புப் படையும், 3 பறக்கும் படையும், ஒரு விடியோ பதிவு பிரிவும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பறக்கும்படைப்பிரிவில் வட்டாட்சியா், பிற துறை உதவி இயக்குநா், காவல்துறையினா் மற்றும் விடியோ பதிவாளா் என குறைந்தது 6 போ் இடம் பெற்றுள்ளனா். தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். வாகனச் சோதனையை கண்காணிக்க நவீன கட்டுப்பாட்டு அறையும் உள்ளது என்றாா்.
கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு: தோ்தல் நடத்தை விதிமுறைகள் வெள்ளிக்கிழமை மாலை முதலே நடைமுறைக்கு வந்ததை அடுத்து ராமநாதபுரம் ரயில் நிலையம், நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் ராஜா பள்ளி மைதானச் சுற்றுச்சுவா் ஆகியவற்றில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்களை அழிக்க தோ்தல் அலுவலா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை காலை உத்தரவிட்டாா். அதனடிப்படையில் ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் அனைத்து சுவா் விளம்பரங்களையும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியா்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.