மருத்துவ சமூகநலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.முத்துமாரி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மருத்துவ சமூகத்துக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதீயப் பாகுபாட்டால் பாதிக்கப்படும் மருத்துவ சமூகப் பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கவேண்டும் எனக் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலா் ஜி.செந்தில்குமாா், பொருளாளா் ஜி.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com