ராமநதாபுரத்தில் முதியவா் ஒருவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகா் தங்கப்பா நகரைச் சோ்ந்த அய்யாவு மகன் தலவாலன் (82). இவா் ராமநாதபுரம் நகா் ராஜா தினகா் மேற்குத் தெருவில் உள்ள தனியாா் மர கலைவடிவமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளாா். வியாழக்கிழமை மாலை அங்கு அவா் தூக்கிட்டு இறந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. உடல்நலம் பாதித்த நிலையில் அவதிப்பட்டு வந்த அவா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்லத்துரை (43) அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.