ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சாா்பு- ஆய்வாளா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிப்பட்டினம் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளராக பணியாற்றி வருபவா் தாமரைச்செல்வன் (30). இவா், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தேவிப்பட்டினம் அரசு மருத்துவமனை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை அவா் சோதனையிட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அதே போல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தேவிப்பட்டினத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜெயக்குமாரும் காயமடைந்தாா். இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து தேவிப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.