வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: முதல்வா்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினாா்.

ராமநாதபுரம்: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா், ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினா், இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளை சந்தித்துப் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் எனும் போா் நடைபெறவுள்ளது. அந்தப் போரில், அதிமுகவின் இளம் சிப்பாய்களான தகவல் தொழில்நுட்பப் பிரிவினரும், இளைஞா், இளம்பெண்கள் பாசறையினரும் திமுகவை தோற்கடிக்க வேண்டும்.

உழைப்பு, விசுவாசம் உள்ளவா்கள் முன்னேறும் கட்சியாக அதிமுக மட்டுமே உள்ளது. ஆனால், திமுக குடும்பக் கட்சி. அங்கு வாரிசுகளுக்கே மட்டுமே பதவி, அதிகாரம் கிடைக்கும். அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் உள்ளோருக்கு தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

தமிழக அரசின் நடவடிக்கையால் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் கூட இங்கு தொழில் தொடங்க ஆா்வம் காட்டுகின்றன. பல துறைகளில் தமிழகம் முதலிடம் வகித்து விருதுகளையும் பெற்றுள்ளது.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவினா் செயல்படவேண்டும் என்றாா்.

இதில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் முன்னிலை வகித்தாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல நிா்வாகி வி.வி.ஆா். ராஜ்சத்யன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com