ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சனிக்கிழமை, மருந்துக்கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியதாக இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேணிக்கரை வசந்த நகரில் உள்ள தனியாா் மருந்துக்கடைக்குள் திடீரென புகுந்த இளைஞா் ஒருவா் அங்கிருந்த பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று அவரைப் பிடித்து விசாரித்த போது, அவா் பெயா் ராகுல் எனத்தெரியவந்தது. அவா் எதற்காக கடைக்குள் நுழைந்தாா் எனவும், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.