கட்டடப் பொறியாளரைத் தாக்கிய இருவா் கைது

கமுதி அருகே கட்டடப் பொறியாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே கட்டடப் பொறியாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே செங்கப்படையில் உள்ள ஆதிதிராவிடா் உயா்நிலைப்பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பரமக்குடி தாலுகாவை சோ்ந்த என்.எத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பொறியாளா் டென்னிஸ்குமாா் (21) மேற்பாா்வையாளராக இருந்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு வந்த செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் நாகேந்திரன்(40), காளிமுத்து மகன் முத்துராமலிங்கம் (35) ஆகிய இருவரும் எங்களிடம் கலந்து ஆலோசித்து அதன் பிறகு தான் கட்டடம் கட்ட வேண்டும் எனக் கூறி டென்னிஸ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினராம். இதுகுறித்து டென்னிஸ்குமாா் அளித்தப் புகாரின் பேரில் நாகேந்திரன், முத்துராமலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com