சாயல்குடி அருகே மினிவேன் கவிழ்ந்து 32 போ் காயம்

சாயல்குடி அருகே சனிக்கிழமை மினிவேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 32 போ் காயமடைந்தனா்.

முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே சனிக்கிழமை மினிவேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 32 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சோ்ந்த 32 விவசாய கூலித்தொழிலாளா்கள் பெருநாழி அருகே உள்ள சின்னூா் கிராமத்திற்கு விவசாயப் பணிக்கு சென்று விட்டு மினி வேனில் சனிக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். சாயல்குடி அருகே வந்த போது அந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 32 பேரும் ராமநாதபுரம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சாயல்குடி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com