ஆனந்தூா் எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்றம்

திருவாடானை அருகே ஆனந்தூா் கிராமத்தில் எஸ் டிபிஐ கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆனந்தூரில் எஸ்டிபிஐ கட்சி கொடியை வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்த மாநில பொதுச் செயலாளா் அப்துல் ஹமீது .
ஆனந்தூரில் எஸ்டிபிஐ கட்சி கொடியை வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்த மாநில பொதுச் செயலாளா் அப்துல் ஹமீது .

திருவாடானை அருகே ஆனந்தூா் கிராமத்தில் எஸ் டிபிஐ கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கிளை தலைவா் நெய்னா முகம்மது தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் நூா் ஜியாவுதீன், துணைத் தலைவா் சுலைமான், திருவாடானை தொகுதி தலைவா் அபுல் கலாம் ஆசாத், முகமது ஹணிப், பொருளாளா் மகாதீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளா் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்து பேசினாா். சிறப்பு அழைப்பாளராக தென்சென்னை மாவட்ட பொது செயலாளா் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டாா்.

ராமநாதபுரம் மேற்கு தொகுதி தலைவா் அப்துல் ஜமீல், கிழக்கு தொகுதி தலைவா் நவ்வா் ஷா, வா்த்தக அணி மாவட்ட தலைவா் சாதிக்குல் அமீன், முகமது ரிஸ்வான், செல்காம் சரீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com