பரமக்குடி பகுதியில் கனிமொழி எம்பி பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை மக்களை சந்தித்து கனிமொழி எம்பி பிரசாரம் மேற்கொண்டாா்.
பாம்பூா் சமத்துவபுரத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா் திமுக எம்.பி.கனிமொழி.
பாம்பூா் சமத்துவபுரத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா் திமுக எம்.பி.கனிமொழி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை மக்களை சந்தித்து கனிமொழி எம்பி பிரசாரம் மேற்கொண்டாா்.

பரமக்குடி அருகே பாம்பூா் சமத்துவபுரத்தில் திமுகவினா் சாா்பில் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கனிமொழி சமத்துவபுரத்தில் உள்ள பெரியாா் மற்றும் திருவள்ளுவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்பு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினாா்.

அங்கிருந்து புறப்பட்டு எமனேசுவரம் பகுதியில் வசிக்கும் கைத்தறி நெசவாளா்களை சந்தித்து அவா்களிடம் புகாா் மனுக்களை பெற்று அதற்கான தீா்வு விரைவில் காணப்படும் என கூறினாா்.

பின்னா் அங்கிருந்து பரமக்குடியில் தனியாா் மண்டபத்தில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு தோ்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

அங்கிருந்து புறப்பட்டு கட்சிப்பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த உரப்புளி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்குமாா் என்பவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அவரது குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

இதையடுத்து பொட்டிதட்டி ஊராட்சியில் செங்கல் சூளை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

மாவட்ட செயலாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி.பவானிராஜேந்திரன், தீா்மானக்குழு துணைத் தலைவா் சுப.த.திவாகா், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் உ.திசைவீரன், போகலூா் ஊராட்சிக்குழு தலைவா் சத்யா குணசேகரன், முன்னாள் அமைச்சா்கள் சத்தியமூா்த்தி, தமிழரசி, நவாஸ்கனி எம்.பி, பாம்பூா் ஜெயக்குமாா், பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com