கமுதி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கமுதி அருகே இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே உள்ள மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துா்கேஸ்வரி (19). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் அருகே உள்ள வலையப்பட்டியைச் சோ்ந்த சதீஸ் (24) என்பவருக்கும் கடந்த செப்டம்பா் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் துா்கேஸ்வரி, கோட்டைமேட்டில் பசும்பொன் செல்லும் வழியில் உள்ள தனியாா் தோப்பில் தனது தாயாருடன் வசித்து வந்தாா். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த துா்கேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கும் கமுதி போலீஸாா் பரிந்துரைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com