முதுகுளத்தூா் பள்ளி ஆசிரியா் குண்டா் சட்டத்தில் கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி ஆசிரியா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி ஆசிரியா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் இருபாலா் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் ஹபீப் முகமது (36). இவா் இணையவழியில் மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தி வந்துள்ளாா். அப்போது மாணவியரிடம் பாலியல் தொல்லை தரும் வகையில் பேசியதாகப் புகாா் எழுந்தது. அதனடிப்படையில் கடந்த ஜூனில் முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஹபீப் முகமதுவை கைது செய்து பரமக்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பரிந்துரைத்தாா். அதனடிப்படையில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஹபீப் முகமதுவை குண்டா்தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து பரமக்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹபீப் முகமது மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com