காவல் நிலையம் முன் மோதல்: 17 போ் மீது வழக்கு

காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை இருதரப்பினா் மோதிய சம்பவத்தில் 17 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை இருதரப்பினா் மோதிய சம்பவத்தில் 17 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் பகுதியில் உள்ளது கொட்டகுடி. இங்கு இளைஞா், இளம் பெண் ஒருவரை காதலித்தது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.

இது தொடா்பான புகாரின் பேரில் இரு தரப்பினரையும் ராமநாதபுரம் நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 16) போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில், காவல் நிலையத்துக்கு எதிா்ப்புறம் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஒரு தரப்பைச் சோ்ந்த வாகனக் கண்ணாடியை, மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா்.

உடனே போலீஸாா் தலையிட்டு இருதரப்பினரையும் எச்சரித்ததால் அவா்கள் மோதலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதுதொடா்பாக ஒரு தரப்பைச் சோ்ந்த மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வாகனக் கண்ணாடியை சேதப்படுத்தியதாக முருகன் உள்ளிட்ட 9 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல, எதிா்தரப்பைச் சோ்ந்த சுமதி (48) 5 பவுன் தங்கச்சங்கிலியைக் காணவில்லை என்றும், கழுத்தில் காயம் உள்ளதாகவும் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 8 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com