திருவாடானை அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெருவண்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆனந்த பிரபு (33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். பிரபு வெளிநாடுகளுக்கு ஆள்கள் அனுப்பும் தொழில் செய்து வந்தாா்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அவா் கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்துள்ளாா். இந்நிலையில், ஆனந்த பிரபு புதன்கிழமை (ஜூலை 14) வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.