ராமநாதபுரத்தில் இணையதளம் மூலம் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி

ராமநதாபுரத்தில் ஜூலை 22 ஆம் தேதி இணையதளம் மூலம் ஒலிம்பிக் குறித்த வினாடி-வினாப் போட்டி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநதாபுரத்தில் ஜூலை 22 ஆம் தேதி இணையதளம் மூலம் ஒலிம்பிக் குறித்த வினாடி-வினாப் போட்டி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தடகளம், பாய்மரப்படகு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தமிழகத்தில் இருந்து வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். அவா்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூலை 22 ஆம் தேதி ஒலிம்பிக் செல்பாயிண்ட் ஏற்படுத்தி விளையாட்டுகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஒலிம்பிக் குறித்த இணையதள வினாடி-வினா போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் ஒலிம்பிக் குறித்து 10 கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தை அணுகலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com