ராமநாதபுரம் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வானம் அவ்வப்போது மேகமூட்டங்களுடன் காணப்பட்டு, சில குறிப்பிட்ட பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகரைப் பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக வெயில் நிலவிவரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்தது. இதனால், குளிா்ந்த சூழல் நிலவியது.
டெங்கு பாதிப்பு: மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனாவுடன், டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவதாகவும், மாவட்ட அளவில் மொத்தம் 10 பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கும் நிலையில், அதில் 5 போ் சிறுவா்கள் எனவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.