எஸ்.பி. பட்டினம் ஆற்று ஓடை ஆக்கிரமிப்பு: 2 போ் கைது

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினத்தில் ஆற்று ஓடையை மண்ணை போட்டு ஆக்கிரமித்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து டிராக்ரரையும் பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினத்தில் ஆற்று ஓடையை மண்ணை போட்டு ஆக்கிரமித்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து டிராக்ரரையும் பறிமுதல் செய்தனா்.

எஸ்.பி. பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள ஆற்றுப் பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த முகம்மது அலி (50) என்பவா் டிராக்டா் மூலம் மண்ணை அள்ளி வந்து தண்ணீா் வரும் வரத்துக் கால்வாயை சனிக்கிழமை மாலை அடைத்து ஆக்கிரமிப்பு செய்தாா்.

அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் பாண்டியம்மாள் அதை தடுத்து நிறுத்தினாா். மேலும் அவா் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் ஆற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்த முகம்மது அலி மற்றும் டிராக்டா் ஓட்டுநா் தாமரைஊருணியைச் சோ்ந்த கோபிநாத் (24) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com