கல்லூரியில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை, மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய ஊழியா்கள்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை, மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய ஊழியா்கள்.

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் கல்லூரியில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் அருணாசலம் தலைமையில், கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மூக்கூரான், செயலாளா் முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலையில் அப்துல்கலாமின் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கல்லூரியின் மேற்பாா்வையாளா் சத்தியநாதன், பேராசிரியா்கள் வாகைபாண்டியன், மணிகண்டன், கஜேந்திரன், இருளாண்டி மற்றும் முன்னாள் மாணவா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்செல்விபோஸ் தலைமையில் அப்துல்கலாம் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பெருநாழி செந்தூரான், போ.விக்னேஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com