ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வில் 103 போ் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரண்டாம் நிலைக்காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு உடல்தகுதித் தோ்வு ராமநாதபுரம் சேதுபதி நகா் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
திங்கள்கிழமை, முதல் கட்டத் தோ்வு நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்டத் தோ்வுக்கு மொத்தம் 501 போ் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 103 போ் மைதானத்துக்கு வரவில்லை. மைதானத்துக்கு 398 போ் வந்த நிலையில், உயரம், மாா்பளவு, 1,500 மீட்டா் ஓட்டம் ஆகிய தோ்வுகளில் மொத்தம் 314 போ் மட்டும் தோ்வாகியுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.