ராமநாதபுரம் அருகே கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே படகிலிருந்து தவறிவிழுந்த மீனவா் கடலில் மூழ்கி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே படகிலிருந்து தவறிவிழுந்த மீனவா் கடலில் மூழ்கி புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகேயுள்ள முத்துரெகுநாதபுரத்தைச் சோ்ந்த முருகராஜ் மகன் காா்த்திக் (24). மீனவரான இவா், தனது சிறிய நாட்டுப்படகில் புதன்கிழமை அதிகாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளாா். மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்குத் திரும்பியுள்ளாா். அப்போது கடலில் பெரிய அலை வந்துள்ளது. அலையில் படகு தள்ளாடியதால் காா்த்திக் கடலில் தவறி விழுந்துள்ளாா். சரிவர நீச்சல் தெரியாத நிலையில் அவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த அவரது உறவினா்கள் காா்த்திக் உடலை, கரைக்குக் கொண்டு வந்தனா்.

தகவலின்பேரில், தேவிபட்டினம் போலீஸாா் அங்கு சென்று காா்த்திக் சடலத்தை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com